ஆஸ்கார் முனோஸ் அவர்கள் 2003 ஆம் ஆண்டு, “லா நொரியா” என்றழைக்கப்படும் அடகாமா பாலைவனப் பகுதியில் ஒரு எலும்புக்கூடினைக் கண்டுபிடித்தார். 15 செ.மீ க்கும் குறைவாக இருக்கும் இந்த எலும்புக்கூடு கடினமான பற்களையும், பெரிய தலைப்பகுதியையும் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
10 ஆண்டுகளாக இந்த எலும்புக்கூடு வேற்றுகிரக வாசிகள் இருப்பதற்கு ஒரு உதாரணமாகவே கருதப்பட்டு வந்தது. இந்த எலும்புக்கூடு பற்றி பல கருத்துக்கள் வலம் வந்த வண்ணம் இருந்தன. இது ஒரு குரங்கு இனமாகவோ அல்லது வேற்று கிரக வாசியாகவோ இருக்கலாம் என கற்பனை செய்யப்பட்டன. ஆனால் இதுவும் மனித இனம் தான் என தற்போதைய ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது.
இது பற்றி டி.என்.ஏ. மற்றும் பிற ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட டாக்டர் ஸ்டீவன் க்ரீர் தலைமையிலான குழு “இந்த உயிரினம் கண்டிப்பாக மனித இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும்” என்று உறுதிபடக் கூறுகிறது. அத்துடன் இவரின் கருத்துக்களை ஸ்டான்ஃபோர்டில் உள்ள டாக்டர் நோலன் மற்றும் டாக்டர் லாக்மான் ஆகியோரும் ஒப்புக்கொள்கின்றனர்.